முன்னாள் எம்.பி. கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் புதன்கிழமை (செப்.12) முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
புதிய கட்சியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவை சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் புதுவை அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கினார்.
சில ஆண்டுகளாக அரசியலில் ஏற்பட்ட பிரச்னைகளால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அண்மையில் அவரது ஆதரவாளர்கள் அவரைச் சந்தித்து புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கண்ணன் மெளனம் காத்து வந்தார். இந்த நிலையில், கண்ணன் புதன்கிழமை மாலை தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளார். அதில், விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
அப்போது கட்சி தொடங்கும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.