போக்குவரத்து மாற்றத்தை கண்டித்து சாலை மறியல்

புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரத்தில் போக்குவரத்து மாற்றத்தைக் கண்டித்து


புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரத்தில் போக்குவரத்து மாற்றத்தைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலப் பணியால், அரும்பார்த்தபுரம் - வில்லியனூர் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, புதுச்சேரி பகுதியில் இருந்து வில்லியனூர் செல்லும் கார் உள்ளிட்ட சிறிய இலகுரக வாகனங்கள் அரும்பார்த்தபுரம் உள் பகுதி வழியாக ஒத்தவாடை ரயில்வே கடவுப் பாதையைக் கடந்து புதிய புறவழிச் சாலை வழியாகச் செல்ல வேண்டும். ú மலும், வில்லியனூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் வி.தட்டாஞ்சாவடி ரயில்வே கடவுப் பாதை பகுதி வழியாக ஜி.என்.பாளையம், ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் செல்ல வேண்டும்.
இந்தப் போக்குவரத்து மாற்றத்தால் ஜி.என். பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் போக்குவரத்து தங்களது கிராம மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, தட்டாஞ்வாவடி ரயில்வே கடவுப் பாதை அருகே சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஜி.என்.பாளையம் வழியாகப் போக்குவரத்து தடைபட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கலியபெருமாள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மறியலைக் கைவிட்டு இளைஞர்கள் கலைந்து சென்றனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com