சங்கராபுரத்தில் இலக்கியச் சொற்பொழிவு

சங்கராபுரத்தில் சங்கைத் தமிழ்ச் சங்கம் சார்பில், சனிக்கிழமை இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றது.

சங்கராபுரத்தில் சங்கைத் தமிழ்ச் சங்கம் சார்பில், சனிக்கிழமை இலக்கியச் சொற்பொழிவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். வள்ளலார் நெறி பரப்புநர் சாதுகற்கண்டு சிவஞான அடிகள், கவிஞர்கள் இரா.துரைமுருகன், செ.வ.மதிவாணன், ஓவியர் மு.கலைச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கச் செயலர் ச.சாதிக்பாட்ஷா வரவேற்றார். தலைமை ஆசிரியை சி.இலட்சுமி குறள் விளக்கம் அளித்தார். சங்கக் காப்பாளர் ஆ.இலட்சுமிபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் ந.கண்ணன், புலவர் இரா.கதிர்வேல், தலைமை ஆசிரியை பெ.கலைச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கவிஞர் சண்முகம் பிச்சைப்பிள்ளை பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்.
வணிகர் பேரவை மாவட்டப் பொருளர் இராம.முத்துக்கருப்பன், முனைவர் தெ.சாந்தகுமார், ஓய்வுபெற்ற ஆசிரியை இரா.சவரியம்மாள், ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் முகமதுரபி, தலைமை ஆசிரியர் செல்வராஜ், அரிமா முன்னாள் மாவட்டத் தலைவர் கே.ஜனார்த்தனன்சிங், கவிஞர் பாரதிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பி.கே.ஜெயராமன், அரிமா முன்னாள் மாவட்டத் தலைவர் ஜனனி.மகாலிங்கம், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சங்கப் பொருளர் தி.கோ.நரசிம்மன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com