அம்மா திட்ட முகாம்

மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலம் தொகுதி கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 திண்டிவனம் வட்டாட்சியர் கீதா, மண்டல துணை வட்டாட்சியர் ஆதிபகவான்,வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தனர். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.மாசிலாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, பட்டா மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கான மனுக்களைப் பெற்றார். மயிலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லதா, சுகாதார ஆய்வாளர் ஏழுலை, கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார்,ஊராட்சிச் செயலர் நடராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com