ஆயுள் காப்பீடு விழிப்புணர்வுப் பேரணி

கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி. கிளை சார்பில் ஆயுள் காப்பீடு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் எல்.ஐ.சி. கிளை சார்பில் ஆயுள் காப்பீடு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 கள்ளக்குறிச்சி கிளையின் முதன்மை மேலாளர் சுசிகிருஷ்ணவேணி தலைமை வகித்தார். சின்னசேலம் கிளையின் கிளை மேலாளர் மா.சுரேஷ்குமார், சங்கராபுரம் கிளையின் மேலாளர் டி.பி.லஷ்மணன் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி கிளையின் உதவி மேலாளர் எம்.எஸ்.சிவக்குமார் வரவேற்றார்.
 கள்ளக்குறிச்சி கிளையின் முதன்மை மேலாளர் சுசிகிருஷ்ணவேணி எல்.ஐ.சியின் சிறப்புத் திட்டங்கள் குறித்தும் திட்டங்களின் பல்வேறு நன்மைகளைக் கூறியும் பேரணியை தொடக்கி வைத்தார்.
 பேரணியில் முகவர்கள், ஊழியர்கள் மோட்டார் சைக்கிளின் முன் விழிப்புணர்வு வாசகங்களுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக அலுவலகம் வந்தடைந்தனர். வழிநெடுக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. பேரணியில் எஸ்.தங்கவேல், கே.விநாயகம், பி.ராமச்சந்திரன், இரா.அழகேசன், சுந்தரராமன் உள்ளிட்ட மூத்த வளர்ச்சி அதிகாரிகள், எல்.ஜ.சி முகவர் சங்கத் தலைவர் மூ.தனபால், செயலாளர் செல்வம், இணைச் செயலர் சிலம்பன், பி.கணேசன், மதுரைமுத்து, கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகவர் சங்க பொருளாளர் க.செந்தில்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com