விழுப்புரம் காகுப்பத்தில் குளத்தில் மூழ்கிய தொழிலாளி மாயமானார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், லூகாஸ் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் மணி(34). சலவைத் தொழிலாளி. இவர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு விழுப்புரம், காகுப்பம், மேலத்தெருவில் வசிக்கும் தன் சகோதரர் சிவகுரு வீட்டுக்கு வந்திருந்தார்.
வெள்ளிக்கிழமை, விழுப்புரம் திருத்தொண்டர் நகரில் உள்ள கோயில் திருவிழாவையொட்டி காகுப்பம் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் குளக்கரைக்கு கலசம் எடுக்கச் சென்றனர்.
அப்போது, அங்கு வந்த மணி, குளத்தில் இறங்கி குளித்ததாகக் கூறப்படுகிது. ஆழமானப் பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கி மாயமானார்.
தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் குளத்தில் 3 மணி நேரம் தேடியும் மாயமான மணியை தேடி பார்த்தனர்.
ஆனால், கிடைக்கவில்லை. விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.