விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், சித்தானங்கூரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகன் டேனியல் (8). இவர், அதே ஊரில் உள்ள பள்ளியில் 3}ஆம் வகுப்பு படித்து வந்தார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வீரப்பார் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் சசிகுமார்(11). அங்குள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த இவர், சித்தானங்கூரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்திருந்தார். இவ்விரு மாணவர்களும், சில சிறுவர்களுடன் சேர்ந்து பள்ளி விடுமுறை தினமான சனிக்கிழமை, அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் குளித்தனர். அப்போது, டேனியல், சசிகுமார் ஆகியோரைக் காணவில்லை. தகவலறிந்து வந்த அவர்களது பெற்றோர்கள், ஏரியில் தேடிப் பார்த்தபோது மாணவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.