திண்டிவனத்தில் மாநில அளவிலான 63}ஆவது ஜூனியர் பூப்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பழைய யூனியன் கிளப் விளையாட்டு மைதானத்தில் 2 நாள்கள் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் திண்டிவனம் சார் } ஆட்சியர் பிரபுசங்கர் கலந்து கொண்டு, போட்டியை தொடக்கி வைத்ததுடன், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 80}க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் செப்டம்பர் மாதம் ஜம்மு } காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய பட்டய பூப்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். தொடக்க விழாவில் தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே.நடேசன், மாவட்ட துணைத் தலைவர் எம்.டி.முத்து, பொதுச்செயலர் வி.எழிலரசன், பொருளாளர் கே.ராஜாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.