அரசுப் பேருந்து மோதியதில் பெண் சாவு

திண்டிவனத்தில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.

திண்டிவனத்தில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
 திண்டிவனம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (70). இவரது மனைவி சாந்தகுமாரி (65). இருவரும் பைக்கில் செஞ்சி சாலையில் உள்ள திரையரங்கு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, திண்டிவனத்தில் இருந்து ஒகேனக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, இவர்களது பைக்கின் பின்பகுதியில் மோதியது.
 இதில் நிகழ்விடத்திலேயே சாந்தகுமாரி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது கணவர் ஜெயச்சந்திரன் திண்டிவனம் அரசு மருத்துவமனையின் முதலுதவிக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 விபத்து குறித்து ரோசணை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com