திண்டிவனம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க வட்ட பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, சங்கத்தின் வட்ட தலைவர் சடகோபன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலச் செயலர் எஸ்.பாஸ்கரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட்டச் செயலர் செல்வகுமார், பொருளர் சூரியராஜன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.