பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், மதவாத அரசியலை எதிர்க்கும் வகையிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கருஞ்சட்டை அணிந்து விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் முஸ்தாக்தீன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அபுபக்கர் அஜ்மல், பிலால், காஜாமொய்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் பசல் முகமது வரவேற்றார்.
க.பொன்முடி எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் சமது, காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் குலாம்மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் அமீர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாவட்டச் செயலாளர்கள் பாரூக், சாதிக், மாவட்டப் பொருளாளர்கள் அப்பாஸ், சாதிக்பாஷா, நவாப்ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகரச் செயலாளர் அக்பர் அலி நன்றி கூறினார்.