மனித நேய மக்கள் கட்சி முற்றுகைப் போராட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டிவனம் ரயில் நிலைய வளாகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டிவனம் ரயில் நிலைய வளாகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் மாவட்டச் செயலர் ஏ.எம்.இப்ராஹீம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சட்டத்தின் அடிப்படையில் நீதியான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டப் பொருளர் ஜெ.ரிஸ்வான், மாவட்ட துணை செயலர்கள் எஸ்.ஆர்.
 ஆதம்,ஜெ.எம்.சௌகத்அலி,நகர செயலர் எஸ்.சையத் உசேன், நகரப் பொருளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர் ஏ.சாதிக்அலி கண்டன உரையாற்றினார்.
 இந்த போராட்டத்தில் திராவிடர் கழக விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் தி.ச.திருமார்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட தலைவர் டி.ராமதாஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com