பாமக தொடக்க விழா: கட்சியினர் கொண்டாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை, விழுப்புரம் மாவட்டத்தில் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழாவை, விழுப்புரம் மாவட்டத்தில் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.
 வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் உள்ள பாமக ஒன்றியக் கட்சி அலுவலகத்தில் வானூர் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு வானூர் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் தருமன், விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கிழக்கு மாவட்டச் செயலாளர் சேது சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னாள் ஒன்றியச் செயலாளர் சௌந்தர், வானூர் ஒன்றிய நிர்வாகிகள் வடிவேல், விமல்ராஜ், தென்னரசு, பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 தைலாபுரம் தோட்டத்தில் முன்னாள் எம்.பி. தன்ராஜ் தலைமையில், கட்சியினர் கட்சி கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கினர். இதேபோன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாமக நிர்வாகிகள் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com