அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொடு திரை மூலம் கற்பித்தல் பயிற்சி

செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடுதிரை மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடுதிரை மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
 இப்பயிற்சியை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திலிப், விஜயகுமார், ரமேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
 இதில் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் 32 பேரும், மாணவர்கள் 20 பேரும் கலந்து கொண்டனர்.
 தொடுதிரையை மாணவர்கள் பயன்படுத்தவும், தொடுதிரை பாடப் பகுதிகளை தயாரித்து கற்பிக்கும் முறையையும், மாணவர்களுக்கு தொடு திரை விளையாட்டுகள் மூலம் கற்பித்தல் பயிற்சியும் வழங்கப்பட்டது.
 இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், தங்களது வகுப்புகளையும் தொடுதிரை வகுப்பறைகளாக மாற்றி மாணவர்களுக்கு உலகத்தர கல்வியை வழங்குவோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com