தேமுதிக தீவிர உறுப்பினர் சேர்க்கை

தேமுதிக ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆர்க்கவாடி, ஈருடையாம்பட்டு, வடமாமந்தூர், சீர்ப்பாதநல்லூர்,

தேமுதிக ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆர்க்கவாடி, ஈருடையாம்பட்டு, வடமாமந்தூர், சீர்ப்பாதநல்லூர், இளையனார்க்குப்பம் ஆகிய கிராமங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 முன்னாள் ஒருங்கிணைந்த ஒன்றியச் செயலர் டி.கே.கோவிந்தன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலர் வி.பி.அஞ்சாமணி, ஒன்றியப் பொருளாளர் ஏசுதாஸ், ஒன்றியத் துணைச் செயலர் ஞானசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இப்பணியின் போது, வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி விஜயகாந்த் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது. ஊராட்சிச் செயலர்கள் வெங்கடேசன், பன்னீர்செல்வம், கிளைச் செயலர்கள் அய்யப்பன், இளையராஜா, ராமச்சந்திரன், கண்ணன் சின்னதம்பி, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com