கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில், தனியார் வங்கியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி வட்டச் செயலாளர் அ.பா.பெரியசாமி தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு அ.நடேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை பங்கேற்றுப் பேசினார். மாவட்டக்குழு அ.நடேசன், வட்டக்குழு இரா.சாந்தமூர்த்தி, எஸ்.தங்கதுரை, வி.ராஜா, பி.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடன் வலையில் விவசாயிகளை வீழ்த்தியும் , வாகனக் கடன் தருவதாக ஏழை மக்களின் மனதில் ஆசையை வளர்த்து வாகனம் வாங்கிய பிறகு பாதிக்கும் மேல் தவணையை வசூலித்துக்கொண்டு, அடியாள்களைக் கொண்டு மிரட்டும் வங்கி மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.