மயிலம் தொகுதிக்கு உள்பட்ட வெங்கந்துôர் ஊராட்சியில் உள்ள குளத்தை துôர்வாரும் பணியை தொகுதி எம்எல்ஏ இரா.மாசிலாமணி ஞாயிற்றுகிழமை தொடக்கிவைத்தார்.
பொக்லைன் இயந்திரம் மூலம் தனது சொந்த செலவில் குளம் தூர்வாரும் பணியை மேற்கொள்ளும் இரா.மாசிலாமணி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், தொடர்ந்து அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் துôர்வாரப்படவில்லை.
கருவேல மரங்கள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளதால், போதுமான தண்ணீரும் இல்லாததால் வறட்சி நிலவி வருகிறது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் குளம் தூர்வாரும் பணியை தொடக்கியுள்ளோம். தொகுதியில் உள்ள அனைத்து குளங்களும் துôர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் சேதுநாதன், மணிமாறன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மலர்மன்னன், வசந்தா, பொருளாளர் ரவி, அவைத் தலைவர் ராஜாமணி, ஜெயபால், கண்ணன், சேகர், குமரேசன், ஞானசேகர், அன்பழகன், ராம்குமார், தம்பிராஜா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.