தீ விபத்து: வீடு எரிந்து சேதம்: எம்எல்ஏ நிவாரண உதவி

தியாகதுருகம் அருகே கூரை வீடு தீப் பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் கருகின. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ நிவாரண உதவிகளை வழங்கினார்.

தியாகதுருகம் அருகே கூரை வீடு தீப் பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த பொருள்கள் தீயில் கருகின. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ நிவாரண உதவிகளை வழங்கினார்.
 தியாகதுருகம் ஒன்றியத்தைச் சேர்ந்த முடியனூர் காலனியில் வசித்து வருபவர் கலியன் மனைவி அஞ்சலை. இவர் வீட்டின் முன் பகுதியில் வசித்து வருகிறார். சனிக்கிழமை மாலை விறகு அடுப்பில் தண்ணீர் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது வீடு தீப்பிடித்து எரிந்து, வீட்டின் உள்ளே இருந்த எரிவாயு உருளையும் வெடித்துள்ளது.
 தீ விபத்து குறித்து அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்பட ஆவணங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
 கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு சம்பவ இடம் வந்து பார்வையிட்டு, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவித்தொகை ரூ.5000, வேட்டி, சேலை, அரிசி வழங்கினார்.
 க.காமராஜ் எம்.பி., வட்டாட்சியர் இரா. சுப்புராயன், தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.மயில்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி.மணியன், ஜான்பாஷா, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com