பழுதடைந்த உயர்கோபுர மின் விளக்கு சீரமைக்கப்படுமா?

திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில் எரியாமல் உள்ள உயர்கோபுர கம்பத்தில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில் எரியாமல் உள்ள உயர்கோபுர கம்பத்தில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டி நான்குமுனைச் சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு கம்பம் உள்ளது. இந்தக் கம்பத்தில் 6 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
 கம்பத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் இதுவரை ஒட்டுமொத்தமாக எரிந்ததே கிடையாது.
 தொடக்க காலத்தில் இரண்டு விளக்குகள் எரிந்தன. சமீப காலமாக ஒரு விளக்கு மட்டுமே எரிந்தது. கடந்த 10 நாள்களுக்கு முன்னர் அதுவும் பழுதடைந்து விட்டது.
 இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக வந்துச் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
 இருளில் மூழ்கிக் கிடக்கும் இந்தச் சந்திப்பில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
 அதனால், கம்பத்தில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக எரியும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இருளில் மூழ்கிக் கிடக்கும் சந்திப்புச் சாலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என அனைத்துத் தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com