திருக்கோவிலூர் அருகே பழுதடைந்த உயர்கோபுர மின் விளக்குகள் தினமணி செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.
திருக்கோவிலூரை அடுத்த மணம்பூண்டி நான்குமுனைச் சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு கம்பம் உள்ளது. இந்தக் கம்பத்தில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்து காணப்பட்டன.
மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பான செய்தி தினமணி நாளிதழில் திங்கள்கிழமை வெளியானது.
இச்செய்தி எதிரொலியாக, பழுதடைந்த இந்த மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.