இந்து மலைக்குறவர் சமூகத்தினருக்கு சாதிச் சான்று வழங்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலம் முன் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்து மலைக்குறவன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாதிச் சான்று வழங்குவதில் மெத்தனப் போக்கைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீஸார் அனுமதி மறுக்கவே, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு மலைக்குறவன் சமூகப் பாதுகாப்பு பேரவை நிறுவனர் ஆ.ப.கௌதமசித்தார்த்தன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், கோரிக்கை மனு கோட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டது.
இதில் சின்னசேலம், தெங்கியாநத்தம், நல்லாத்தூர் கல்வராயன்மலை, குரும்பலூர் பகுதிகளச் சேர்ந்த மலைக்குறவர் இனத்தினர், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.