விழுப்புரம், காணை பகுதிகளில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் மருதப்பன் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை காலை எல்லீஸ்சத்திரம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அனுமதியின்றி தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக ஏனாதிமங்கலம் அய்யனார் (31), பன்னீர் (40) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
காணை பகுதியில்...: காணை காவல் உதவி ஆய்வாளர் ஹரிகரசுதன் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை பெரும்பாக்கம் பகுதியில் ரோந்து சென்ற போது, அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 மாட்டு வண்டிகளை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக வெங்கந்தூரைச் சேர்ந்த சுதாகர் (33), ராமதாஸ் (55) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.