உளுந்தூர்பேட்டை அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் எடைக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வநாயகம், எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் ஆகியோர் போலீஸாருடன் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அயன்குஞ்சரம், பாலி புது காலனி ஆகிய பகுதிகளில் மதுபுட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக செல்வராஜ் (45), ரமேஷ் (34) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.