சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை சிவன்,

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை சிவன், நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பிரதோஷ முறைப்படி வலம் வந்து வழிபட்டனர். ஏற்பாடுகளை சிவனடியார் குழுவினர் செய்திருந்தனர்.
 இதே போல, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி நந்தீஸ்வரர் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தார். இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com