பெண் சாவில் சந்தேகம்: எஸ்பியிடம் பெற்றோர் புகார்

விழுப்புரம் அருகே பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகார் அளித்தனர்.

விழுப்புரம் அருகே பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை புகார் அளித்தனர்.
வானூர் அருகே உள்ள தேர்க்குணத்தைச் சேர்ந்த மணி-கலாவதி மகள் பிரபாவதி (25). இவருக்கும், கட்டத் தொழிலாளியான விழுப்புரம் அருகே உள்ள கோனூர் சொக்கநாதன் மகன் பாலு (37) என்பவருக்கும், கடந்த 2008-ல் திருமணம் நடைபெற்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கோனூரில் கணவர் வீட்டில் வசித்து வந்த பிரபாவதி, கடந்த பிப்.13-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக, காணை போலீஸார், தற்கொலைப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக மணி-கலாவதி தம்பதியர், தங்களது உறவினர்களுடன், சனிக்கிழமை விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து புகார் மனு அளித்தனர்.
அவர்கள் புகாரில் கூறியது: திருமணமாகி கணவருடன் வசித்து வந்த மகள் பிரபாவதியிடம், பாலு குடும்பத்தினர் வரதட்சிணை கேட்டு மிரட்டி வந்தனர். திடீரென மர்மமான முறையில் பிரபாவதி இறந்துள்ளார். தாக்கியதில் தான் அவர் இறந்துள்ளார்.
இதுதொடர்பாக, அப்போதே காணை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. இது குறித்து, விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com