jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்

ஆதார் எண் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே மானிய உரம்: ஜூன் 1-இல் தொடக்கம்

By விழுப்புரம்  |   Published on : 19th May 2017 08:09 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

தமிழக விவசாயிகள் உரங்களை மானிய விலையில் பெறும் புதிய திட்டம் ஜூன் 1 முதல் அறிமுகமாகிறது. இதற்கு ஆதார், விரல் ரேகைப் பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.
 விவசாயத்துக்கு நாடு முழுவதும் பயன்படும் உரங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.74 ஆயிரம் கோடியை மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்த மானியத் தொகையை, உர நிறுவனங்களுக்கே மத்திய அரசு நேரடியாக வழங்கி வந்தது.
 இந்த நிலையில் விவசாயிகளுக்கான உர மான்யம் விவசாயிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், உரங்கள் பிற பயன்பாட்டிற்கு கடத்தப்படுவதை தடுக்கும் விதமாகவும் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நேரடி உர மானிய முறையை மத்திய அரசு அமல்படுத்தப்பட உள்ளது.
 தமிழகத்திலும் இந்த நேரடி உர மானிய முறையை அமல்படுத்துவதற்கு வேளாண்மைத் துறையின் உரக்கட்டுப்பாட்டு பிரிவினர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 அதன்படி, வருகிற ஜூன் 1 முதல் அனைத்து பகுதிகளிலும் உள்ள தனியார் உர விற்பனையாளர்கள் மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் ஆதார் எண்ணை அளித்து, விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும்.
 இதற்காக பயோ மெட்ரிக் அடிப்படையில் விவசாயிகளின் ஆதார் விவரங்கள் அடங்கிய கையடக்க மின்னணுக் கருவிகள் (பிஓஎஸ்) உர விற்பனையாளர்கள், வேளாண் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்பட உள்ளன.ரூ.27 ஆயிரத்து 500 மதிப்புள்ள இந்தக் கருவியை, உர நிறுவனங்கள் உர விற்பனையாளர்களுக்கு இலவசமாக வழங்கும். விவசாயிகள் உரம் வாங்க செல்லும்பொது அவரது ஆதார் எண் இந்த கருவியில் பதிவு செய்யப்பட்டு, விரல் ரேகையும் பதிவு செய்தால் மட்டுமே அவருக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும். மானியம் போக மீதி தொகையை விவசாயி அளித்தால் மட்டும் போதுமானது.
 அவருக்கான மானியத் தொகை உர நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கருவி உள்ள சில்லறை உர விற்பனையாளர்கள் மட்டுமே உர விநியோகம் செய்ய இயலும். இதனால், மானியம் விரயமாவது தடுக்கப்படும்.
 இந்த புதிய திட்டம் குறித்து தற்போது உர விற்பனையாளர்களுக்கும், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் பரவலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
 இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண்மைத் துறை மற்றும் தனியார் உர நிறுவனம் சார்பில், விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண் அலுவலர்களுக்கும், உர விற்பனையாளர்களுக்கும் பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 வேளாண்மை இணை இயக்குநர் தி.கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குநர் அரிகிருஷ்ணன், உதவி இயக்குநர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். தனியார் உர நிறுவன மேலாளர்கள் ராஜ்குமார், ஜனகரத்தினம், கோபால் உள்ளிட்டோர் விளக்கிப் பேசினர். மின்னணு இயந்திரம் தொடர்பான விளக்க கையேடுகளும் வழங்கப்பட்டன.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்