பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவையொட்டி, மாணவர்கள் மன உளைச்சலிலிருந்து விடுபட 104 எனும் எண்ணில் மருத்துவ ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் மதிப்பெண் குறைவு, தேர்ச்சி பெறாமல் போதல் போன்ற காரணங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விபரீத முடிவுகள் (வீட்டை விட்டு வெளியேறுதல், தற்கொலை செய்தல்) எடுப்பதைத் தவிர்க்கும் பொருட்டு 104 அரசு மருத்துவ ஆலோசனை சேவை மையத்தை அணுகலாம்.
இதில், மாணவாóகளுக்கும், பெற்றோருக்கும், கல்வி மற்றும் மன நல ஆலோசகர்களைக் கொண்டு, மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட ஆலோசனை வழங்கப்படுகிறது.