விழுப்புரம் அருகே சீரியல் பல்பில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தார்.
விழுப்புரம் அருகே கஞ்சனூரை அடுத்த பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாலன். இவரது வீட்டில் புதன்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வுக்கு வந்திருந்த வேம்பி கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் அஜய் (14) என்பவர், பழுதாகிக் கிடந்த சீரியல் பல்பை எரியவைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அஜய் காயமடைந்தார். விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜய் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கஞ்சனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.