வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கவரம் அரங்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா வருகிற 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெறுகிறது. தேர்த் திருவிழா வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ் தலைமை வகித்தார். கோயில் மேலாளர் மணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பொதுப்பணித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்வாரியத் துறை, வருவாய்த் துறை, ஊராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்துக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது மற்றும் பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிங்கவரத்தில் தேர் செல்லும் வீதிகளை ஆய்வு செய்தனர். கோயில் நிர்வாகிகள் ரங்கநாதன், குணசேகர், இளங்கீர்த்தி, ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.