விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) மின்தடை இருக்கும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் மின் விநியோக செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர். நகர், நன்னாடு, பாப்பான் குளம், திருவாமத்தூர், ஓம் சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பில்லூர், ஆனாங்கூர், கீழ்ப்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை சாலை, கோலியனூர், திருநகர், கம்பன் நகர், பொய்ப்பாக்கம், அரசமங்கலம், மாதிரமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழதரெட்டி ஆகிய பகுதிகளில் வரும் சனிக்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.