jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 91.81% தேர்ச்சி

By DIN  |   Published on : 20th May 2017 07:52 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில் 91.81 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்தாண்டை விட 3.74 சதவீதம் கூடுதல் தேர்ச்சியாகும்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் 549 பள்ளிகளிலிருந்து தேர்வெழுதிய 47 ஆயிரத்து 145 மாணவ, மாணவிகளில் 43 ஆயிரத்து 285 பேர் தேர்ச்சி பெற்று 91.81 சதவீத தேர்ச்சியை பெற்றனர்.
மாணவிகள் 93.47%: தேர்வெழுதிய 23 ஆயிரத்து 621 மாணவிகளில் 22 ஆயிரத்து 78 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.47.  23 ஆயிரத்து 524 மாணவர்களில், 21 ஆயிரத்து 207 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி தவீதம் 90.15.
3.74 % கூடுதல் தேர்ச்சி: கடந்தாண்டு 47 ஆயிரத்து 546 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 41 ஆயிரத்து 872 பேர் தேர்ச்சி பெற்று 88.75 தேர்ச்சி சதவீதத்தை விழுப்புரம் மாவட்டம் பெற்றிருந்தது. இந்தாண்டு, 91.81 சதவீதம் தேர்ச்சி கிட்டியுள்ளது. இதன் மூலம் 3.74 சதவீதம் கூடுதல் தேர்ச்சிவிகிதம் எட்டப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 28-வது இடத்தில் உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கடந்த 2015ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 87.52 சதவீதமும், 2016 தேர்வில் அரை சதவீதம் உயர்ந்து, 88.07 சதவீதமும், இந்தாண்டு 3.74 சதவீதம் உயர்ந்து, 91.81 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சமூக அறிவியலில் 2,542 பேர் சதம்: தமிழ் பாடத்தில் 94.78 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 96.25 சதவீதம் பேரும், கணிதபாடத்தில் 95.16 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 99.34 சதவீதம் பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 97.63 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
கணித பாடத்தில் 361 பேரும், அறிவியல் பாடத்தில் 513 பேரும், சமூகஅறிவியல் பாடத்தில் 2 ஆயிரத்து 542 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
தேர்ச்சியை உயர்த்த வேண்டும்: விழுப்புரம் மாவட்டம், பத்தாம் வகுப்புத் தேர்வில் கடந்த மூன்று ஆண்டுகளாக 90 சதவீதத்தை நோக்கி தேர்ச்சியில் உயர்ந்து வருகிறது. எனினும், மாநில அளவில் கடைநிலையாக 28-வது இடத்தில் நிற்கிறது. பிளஸ் 2 தேர்ச்சியிலும் பின்தங்கியுள்ளது. மாவட்டத்தில், தனியார் பள்ளிகளுக்கு ஈடாக, ஆசிரியர்கள், பள்ளிக் கட்டமைப்புகள் இருந்தபோதும், அதற்கு தகுந்த வகையில், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்து வருகிறது.
இது குறித்து, கல்வி அதிகாரிகள் கூறுகையில், மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் அதிக அரசுப் பள்ளிகளையும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களையும் கொண்டுள்ளது. 549 பள்ளிகள் மாவட்டத்தில் உள்ளன. பிற முன்னணி பெறும் மாவட்டங்களில் 200 முதல் 400 பள்ளிகளே உள்ளன. அரசுப் பள்ளிகளும் நம்மிடம் 343 உள்ளது. பிற மாவட்டங்களில் அதிகபட்சம் 200 பள்ளிகளே உள்ளன.
இதனால், மாநில அளவில் பின்தங்கிய தோற்றம் உள்ளது. எனினும், தேர்ச்சியை உயர்த்த நடவடிக்கை எடுத்துவருவதாகக்
கூறினர்.

165 பள்ளிகள் முழு தேர்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 549 பள்ளிகளில், 343 அரசுப் பள்ளிகள் உள்ளன. அரசுப் பள்ளிகள் 90 சதவீத தேர்ச்சியை வழங்கின. 67 அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட 165 பள்ளிகள் முழு அளவில் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்