ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீர் விநியோகம் தொடக்கம்

செஞ்சி ஊராட்சி ஒன்றியம் நரசிங்கராயன்பேட்டை எம்ஜிஆர். நகர் மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய

செஞ்சி ஊராட்சி ஒன்றியம் நரசிங்கராயன்பேட்டை எம்ஜிஆர். நகர் மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ்.மஸ்தானின் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்பட்டு, ஆழ்துளைக் கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் செஞ்சி ஒன்றிய திமுக செயலர் ஆர்.விஜயகுமார், ஊராட்சிச் செயலர் சிவகுமார், விவசாய அணி அரங்க.ஏழுமலை, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் காசியம்மாள் ஏழுமலை, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com