தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு: 12 பேர் விருப்ப மாறுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் 2017-18 ஆம் கல்வியாண்டுக்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில், தொடக்கக் கல்வி அலுவலர் சிவ.மதிவாணன் தலைமையில் காலை தொடங்கி மாலை வரை கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தோரின் நிலை, இணைய தளம் மூலம் பட்டியல் வெளியிடப்பட்டு நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களில் பணியாற்றி வரும் 18 உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர். விருப்ப மாறுதல் கோரியவர்களில் உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 12 பேர் அதற்கான ஆணையைப் பெற்றனர். மீதமுள்ள 6 பேர் அதே இடத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தனர். இதனையொட்டி கலந்தாய்வு நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com