இன்று பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (நவ.11) நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (நவ.11) நடைபெறுகிறது.
அனைத்து வட்டங்களிலும் உள்ள ஒரு கிராமத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்தக் குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதன்படி விழுப்புரம் வட்டம் கல்பட்டு கிராமம், வானூர் வட்டம் நல்லாவூர், விக்கிரவாண்டி வட்டம் கொடுக்கூர், திண்டிவனம் வட்டம் கரிக்கம்பட்டு, மரக்காணம் வட்டம் எக்கியர்குப்பம், செஞ்சி வட்டம் ஒட்டம்பட்டு, மேல்மலையனூர் வட்டம் மேல்நெமிலி, திருக்கோவிலூர் வட்டம் விளந்தை, கண்டாச்சிபுரம் வட்டம் பரனூர், உளுந்தூர்பேட்டை வட்டம் டி.குமாரமங்கலம், கள்ளக்குறிச்சி வட்டம் குதிரைச்சந்தல், சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி, சின்னசேலம் வட்டம் வெள்ளிமலை ஆகிய கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் பங்கேற்கும் இந்தக் குறைதீர் கூட்டத்தில், இதன் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கலந்துகொண்டு, புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், இணைய தளம் மூலம் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், வயது திருத்தம் மற்றும் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதில் குறைகள் தொடர்பாக, மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com