உளுந்தூர்பேட்டை கிளை சிறையில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழ மை நடைபெற்றது.
முகாமுக்கு சார்பு நீதிபதி எ.தனசேகரன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்கச் செயலாளர் பி.ஆர்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் பரந்தாமன் வரவேற்றார்.
மூத்த வழக்கறிஞர் வேதகிரி, வழக்கறிஞர் பி.ஆர்.வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு கைதிகளிடையே சட்டம் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிளை சிறை கண்காணிப்பாளர் நன்றி கூறினார்.