விழுப்புரம் மாவட்டத்தில் டிஎஸ்பிக்கள் இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் 81 டிஎஸ்பிகள் வெள்ளிக்கிழமை அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த கோமதி, கள்ளக் குறிச்சி துணை கோட்ட டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, சென்னை குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த விஜயராமன், விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.