புதுச்சேரியிலிருந்துகாரில் மது கடத்தல்: இளைஞர் கைது

புதுச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்

புதுச்சேரியிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோட்டக்குப்பம் அருகே அணிச்சங்குப்பம் சோதனைச் சாவடியில், தலைமைக் காவலர் தேவநாதன் தலைமையிலான போலீஸார், வெள்ளிக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி கிழக்குக் கடற்கரைச் சாலையில் வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் மடக்கி சோதனையிட்டனர். அதில், 830 புதுச்சேரி மதுப் புட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம்.
விசாரணையில், காரில் வந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடு அடுத்த கயநல்லூரைச் சேர்ந்த வேணு மகன் குமரவேல்(23) என்பதும், புதுச்சேரியிலிருந்து குறைந்த விலைக்கு மதுப்புட்டிகளை வாங்கி, சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து, மதுப் புட்டிகளுடன் காரை போலீஸார் பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். குமரவேலை மதுவிலக்குப் போலீஸார் கைது செய்து
விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com