சங்கராபுரம் கிளை நூலகருக்கு தமிழக அரசு விருது

சங்கராபுரம் கிளை நூலகத்தில், மூன்றாம் நிலை நூலகராகப் பணிபுரிந்து வரும் இரா.செழியனுக்கு, தமிழக அரசின் நல் நூலகர் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

சங்கராபுரம் கிளை நூலகத்தில், மூன்றாம் நிலை நூலகராகப் பணிபுரிந்து வரும் இரா.செழியனுக்கு, தமிழக அரசின் நல் நூலகர் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
 பொது நூலக இயக்ககம் சார்பில், நல் நூலகர் விருது வழங்கும் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று, இரா.செழியனுக்கு நல்நூலகர் விருது, பரிசுத் தொகை ரூ. 2 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
 விருதுபெற்ற இரா.செழியனுக்கு, பொது நூலகத் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், விழுப்பும் மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் அகில இந்திய இணைச் செயலர் கவிமாமணி சிங்கார.உதியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com