தலைமைக் காவலர்கள் இருவர் ஆயுதப் படைக்கு மாற்றம்

திருக்கோவிலூர், மதுவிலக்குப் பிரிவு தலைமைக் காவலர்கள் கனிமொழி, ரபேகா ஆகியோரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

திருக்கோவிலூர், மதுவிலக்குப் பிரிவு தலைமைக் காவலர்கள் கனிமொழி, ரபேகா ஆகியோரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
 திருக்கோவிலூர் பகுதியில் சட்ட விரோதமாக சாராய விற்பனை, போலி மது விற்பனை, புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்து விற்பனை செய்வதைத் தடுக்க மதுவிலக்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்தில் தலைமைக் காவலர்களாக பணியாற்றி வந்த கனிமொழி, ரபேகா ஆகியோர் மதுக் கடத்தல், சாராயம் விற்பனை செய்யும் கும்பலுடன் பணம் பெற்றுக்கொண்டு, முறையாக பணி செய்ய தவறுவதாக புகார் எழுந்தது.
 இதை விசாரித்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், அவர்கள் இருவரையும் விழுப்புரம் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com