194 பேருக்கு விலையில்லா மடிக்கணினி

சங்கராபுரம் அருகே அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 

சங்கராபுரம் அருகே அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
தலைமை ஆசிரியர் பி.சக்திவேல் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.கணேசன், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் க.காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் கலந்துகொண்டு, 194 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர்(படம்). 
முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் எஸ்.எஸ்.அரசு, சன்னியாசி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மு.மணிமாறன், கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.சடையப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com