பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல், பொறியியல் துறை தொடக்கம்

அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் தலைவர் விசயா முத்துவண்ணன் தலைமை வகித்தார். முதன்மை செயலாக்க அலுவலர் பொறியாளர் மு.சரவணன், கல்லூரியின் முதல்வர் ந. அன்பழகன் மற்றும் துறைத் தலைவர் பேராசிரியர் ப.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சென்னை ஸ்டான்டர்ட் சார்ட்டட் குளோபல் பிஸ்னஸ் சர்வீஸின் துணைத் தலைவர் எம்.செல்லமுத்து கலந்துகொண்டு டிஸ்டிரிப்டிவ் டெக்னாலஜி குறித்து பேசினார்.
 2017-18-ஆம் கல்வியாண்டின் திட்டப்பணிகள் ஆய்வு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவர் சென்னை எஸ்.ஏ. டெக்னோ சொலுசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மதன்குமார், சி.எஸ்.எஸ். நிறுவனத்தின் நெட் ஒர்க் என்ஜினீயர் முகம்மது முன்னாவர் , டிஜிட்டல் வெப் பிரைவேட் லிமிடெட் சாப்ட்வேர் டெவலப்ராக பணிபுரியும் ஆர்.சௌமி பிரியா மற்றும் எஸ்.சங்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com