அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

செஞ்சி இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி சிறார் மருத்துவத் திட்டம் சார்பில் மாணவர்களுக்கு

செஞ்சி இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி சிறார் மருத்துவத் திட்டம் சார்பில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு, நில வேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார்.
 சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி, மருத்துவர்கள் கோர்பட்சேவ், சரண்யா ஆகியோர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு உரையாற்றி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினர். சுகாதார ஆய்வாளர் ஏழுமலை, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
 ஏற்பாடுகளை பள்ளி சிறார் மருத்துவத் திட்ட விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.டி.பாலசுப்பிரமணியன் செய்திருந்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com