திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், 25 பேருக்கு இலவச சமையல் எரிவாயு உருளை இணைப்பு அண்மையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் ஜெ.சுரேஷ் தலைமை வகித்தார். முகையூர் ஒன்றியத் தலைவர் அரிகிருஷ்ணன், திருக்கோவிலூர் ஒன்றியத் தலைவர் வசந்தன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் சி.வி.பாபு பங்கேற்று 25 பேருக்கு பிரதம மந்திரியின் இலவச சமையல் எரிவாயு உருளை இணைப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்டத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன், திருக்கோவிலூர் நகரத் தலைவர் கார்த்திகேயன், அரகண்டநல்லூர் நகரத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.