சாலையில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் மாதையன் (60). கோழிக்குஞ்சு விற்பனை செய்யும் வியாபாரி. இவர், கடந்த வியாழக்கிழமை தியாகதுருகத்திலிருந்து விருகாவூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மாதையனுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த திருக்கோவிலூர் வட்டம், கொனக்கலவாடியைச் சேர்ந்த தயாளன் மகன் மணிகண்டன் (18), அவர் மீது மோதினாராம். இதில் பலத்த காயமடைந்த மாதையன், கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.