கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி மாணவர் மாயம் 

கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த பத்தாம் வகுப்பு மாணவர் ராட்சத அலையில் சிக்கி மாயமானார். 

கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த பத்தாம் வகுப்பு மாணவர் ராட்சத அலையில் சிக்கி மாயமானார்.
 கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியைச் சேர்ந்த சேகர் மகன் சிவக்குமார்(16). புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், தற்போது பொதுத் தேர்வு எழுதி வருகிறார்.
 இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவக்குமார் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள கடலில் குளித்தார். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி சிவக்குமார் உள்ளிட்டோர் நீரில் மூழ்கினர். இவர்களில் சிவக்குமாரைத் தவிர மற்ற அனைவரும் நீந்தி கரை சேர்ந்தனர். சிவக்குமாரை காணாததால் இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவரை தேடும் பணியில் போலீஸார், அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com