நூலகத்தில் சிறுவர்களுக்கு ஓவியப் பயிற்சி 

திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் சிறுவர்களுக்கான ஓவியப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது. 

திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் சிறுவர்களுக்கான ஓவியப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.
 நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார்.
 தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், சிறுகதை எழுத்தாளர் ம.விருதுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஓவியர் சு.செல்வம், சிறுவர்களுக்கு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு ஓவியம் வரைவது பற்றி பயிற்சி அளித்தார். ஆன்மிக சொற்பொழிவாளர் பரனூர் அம்பலவாணன், சிறுவர்களின் அறிவுத் திறன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி கதைகளோடு விளக்கிக் கூறினார். நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com