ஆர்.ஆர்.குப்பத்தில் கால்நடை மருத்துவ முகாம்

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில், ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில், ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ.திலீப் தலைமை வகித்தார். கால்நடைத் துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். உளுந்தூர்பேட்டை கால்நடை மருத்துவர்கள் தமிழ்மணி, சங்கர் கணேஷ், பெருமாள் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், 60 மாடுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி, சினை ஊசி போட்டனர். மேலும், மாடுகளுக்கு சத்து மாவு வழங்கினர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கச் செயலர் வெங்கடாஜலபதி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே.வெங்கடேசன், வின்சென்ட், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com