திருமாவளவன் பிறந்த நாள்: பனை விதைகள் நடும் விழா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 56-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மேல்மலையனூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிக் கரைகளில் பனை விதைகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 56-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மேல்மலையனூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிக் கரைகளில் பனை விதைகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அண்ணமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் ஒன்றிய விசிக செயலர் நா.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஒன்றியத் துணைச் செயலர் மு.ராஜாராமன் வரவேற்றார். மாநிலத் துணைச் செயலர் துரை.வளவன் முன்னிலை வகித்தார்.
செஞ்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஏரிக்கரைகளில் பனை விதைகளை நடும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், இனிப்புகளை வழங்கிச் சிறப்புரையாறினார். நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றிய திமுக செயலர் நெடுஞ்செழியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் தனஞ்செழியன், ஒன்றியத் துணைச் செயலர் சுந்தரமூர்த்தி, வல்லம் ஒன்றியப் பொருளாளர் குருமூர்த்திவேல், செஞ்சி செல்வபாக்கியா, கன்னலம் வேலன், அன்னமங்கலம் கணபதி, மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com