சரோஜினி நாயுடு பிறந்த நாள் விழா 

ரிஷிவந்தியத்தில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்ப பள்ளியில் கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரிஷிவந்தியத்தில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்ப பள்ளியில் கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சி.ரகுராமன் தலைமை வகித்தார். முஸ்லிம் பள்ளித் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ம.ஆரோக்கியசாமி வரவேற்றார்.
 விழாவில் தமிழ்ச் சங்கத் தலைவர் நல்லாசிரியர் சு.இராஜேந்திரன், இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினார்.
 பின்னர், சரோஜினி நாயுடு பற்றி தமிழில் பேசிய மாணவிகள் பிரியா, கிருத்திகா, ஜோதிலட்சுமி, சுமித்ரா, ஆங்கிலத்தில் பேசிய எஸ்.கலைவர்தினி, வித்யஸ்ரீ, புவனேஸ்வரி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 ஆசிரியர்கள் சுகுனா ராஜகுமாரி, எமினாள், ஜெயந்தி, கிரிஸ்டா பரிமளச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com