சாராய வியாபாரிகள் 2 பேர் கைது 

விழுப்புரம் அருகே சாராய வியாபாரிகள் 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே சாராய வியாபாரிகள் 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், செ.புதூர் கிராமத்தில் ஏரிப் பகுதியில் குன்றின் அருகே சாராயப் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக அந்தக் கிராம இளைஞர் ஒருவர் எடுத்த விடியோ கட்செவி அஞ்சலில் திங்கள்கிழமை பரவியது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், பெரியதச்சூர் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் விவேகானந்தம் தலைமையிலான போலீஸார் நடத்திய விசாரணையில் சாராயம் விற்பனை செய்தவர் செ.குண்ணத்தூரைச் சேர்ந்த செல்வம் (46) என்பது தெரிய வந்தது.
 இதையடுத்து, திங்கள்கிழமை இரவு செல்வத்தை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவியதாக கொளப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ் (33) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 30 லிட்டர் சாராயப் பாக்கெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com